Thursday 7 March 2013

மீன் பேசுகிறது....


மீன் பேசுகிறது....

பெண்ணின் கருவிழியை
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

செத்து கருவாடானாலும்
சுட்டு சாப்பிடுகின்றானே
மனிதன்.

கோவைபழம் பேசுகிறது....

பெண்ணின் உதடுகளோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

குருவி கொத்த முன்னால்
என்னை கபளீகரம் செய்கிறானே!
மனிதன்.

கீளி பேசுகிறது....

பெண்ணின் கீச்சுகுரலோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

சுதந்திரமாய் பறந்துவந்த என்
இனத்தை கூண்டோடுஅழிக்கின்றானே!
மனிதன்.

வாழைமரம் பேசுகிறது....

பெண்ணின் தொடைஅழகோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

என் உடம்பில் எதையுமே
விடாமல் எச்சில் செய்கிறானே!
மனிதன்.

 

 .ஷாஜஹான்,99425 22470.
திருமங்கலம்.மதுரை.

 

 

No comments:

Post a Comment