Friday 25 January 2013

கோடீஸ்வர விளையாட்டு


 கோடீஸ்வர  விளையாட்டு


இந்திய அரசியலில் ஈடுபட தற்போதைய தகுதி என்பது முதலில் கோடீஸ்வரராகவும் கிரிமினலாகவும் இருத்தலே சால சிறந்தது.  குஜராத் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 182 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் அதாவது மொத்தம் 134 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் சொத்து குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி குஜராத் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 182 உறுப்பினர்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள்.

அதாவது 74 சதவீதம் பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள். கடந்த சட்டசபையில் 31 சதவீதம் பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்தனர். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்களில் 46 பேர் தொழிலதிபர்கள். 16 பேர் ரியல் எஸ்டேட் அதிபர்கள். கோடீஸ்வர உறுப்பினர்களில் 51 சதவீதத்தினருக்கு ரூ.5 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. 31 சதவீதத்தினர் ரூ.5 கோடிக்கும் குறைவாக சொத்து இருப்பதாக கணக்கு கொடுத்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக கோடீஸ்வர உறுப்பினர்களை கொண்ட சட்டசபை என்ற பெருமை குஜராத்துக்கு கிடைத்துள்ளது. மக்களவையில் 58 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாகவும், மாநிலங்களவையில் 65 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு கோடீஸ்வரர்களாக உள்ளவர்கள் ஏழை விவசாயி மற்றும்,தொழிலாளர்களின் கஷ்டங்களை எவ்வாறு அறிவர்.இதனால் தான் விவசாயி தற்கொலை செய்துகொள்கின்றான்.தொழிலாளர் நலச்சட்டம் எந்த அரசினாலும்  பேணப்படுவதில்லை.சில நாடுகளில் உள்ள கட்டாய ராணுவப்பயிற்சியை போல் இந்தியாவில் அரசியல்வாதிகளை கட்டாயமாக 5ஆண்டுகள் விவசாயப்பணியும் 5ஆண்டுகள் தொழிற்சாலைகளில் அடிப்படை தொழிலாளியாக  பணியாற்றினால் தான் அரசியலில் ஈடுபடமுடியும் என சட்டம் இயற்றவேண்டும்.அதே போல் தந்தை அரசியல் இருந்து ஆட்சிப்பணி செய்தவர் எனில் கண்டிப்பாக மகன் அரசியலில் ஈடுபடத்தடைவிதிக்கவேண்டும்.நீங்களும்
உழைப்பாளி எனில் சிறந்த தகவல்களை மேலும் வழங்கவும்.

No comments:

Post a Comment