Saturday 24 March 2012

கண்ணீர் தேசம்


வியாபாரி ஆங்கிலேயன்
அதிகாரம் செய்த பொழுது சுதந்திரம்
கேட்ட அன்றைய இந்தியன் முந்தைய
கண்ணீர் தேசத்து மனிதன்.

அதிகார வர்க்கம், அரசியல்வாதி
போலி புரோகிதர்களிடமும் சிக்கி
தவிக்கும்இன்றைய இந்தியன் புதிய
கண்ணீர் தேசத்து மனிதன்.

நாடு வளம் பெற அனை கட்டியது அந்த காலம்
அண்டை மாநிலத்திற்கு நீர் வழங்க மறுத்து
அனை கட்டிவரும் இன்றைய இந்தியன் நவீன
கண்ணீர் தேசத்து மனிதன்.

சுதந்திரம் கேட்ட நமது சகோதரர்களின்
கருவருத்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள
வரவேற்பு அளிக்கும்இன்றைய இந்தியன் அதி நவீன
கண்ணீர் தேசத்து மனிதன்.

கிராமங்களின் உயர்வு இந்தியாவின் உயர்வு எனகூறிய
காந்திதேசத்தில் நகருக்கு இனணயாககிராமங்கள் தோறும்
"
டாஸ்மாக்"கடைதிறந்தஇன்றைய இந்தியன் கணினி உலக
கண்ணீர் தேசத்து மனிதன்.

உன் லட்சியம் தலைவர் யார் என வினா எழுப்பினால் உலகின்
உன்னத வழிகாட்டிகாந்திஜீஇருக்க டாடாவும் பிர்லாவும்
அம்பானி என கூறும்இன்றைய இந்தியன் கரன்சிஉலக
கண்ணீர் தேசத்து மனிதன்.

வாழும் காலங்களில் எப்படியாவது
சுதந்திர காற்றை சுவாசிக்க நினைக்கும்
மனிதர்களின் புண்ணியபூமி இந்தியா.


அஹிம்சா அரசன்காந்திஜீயின் கொள்கையை ஏந்தி பிடிக்காத
இந்தியன் என்றுமே உலகின் பார்வையில்
கண்ணீர் தேசத்து மனிதனே!


.ஷாஜஹான்.

No comments:

Post a Comment